
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தற்பெருமை கொண்டவன் கடவுளின் அருளைப் பெற முடியாது. பணிவு உள்ளவனையே கடவுள் விரும்புகிறார்.
* மனிதப்பிறவி மகத்தானது. இதில் கடவுளை அறிய முயலாவிட்டால், மனித வாழ்வு அர்த்தமில்லாததாகி விடும்.
* மனிதனுக்கு கர்வம் ஏற்படுவதாக இருந்தால், 'நான் கடவுளின் தொண்டன்' அல்லது 'குழந்தை' என்ற எண்ணத்தால் உண்டாகட்டும்.
* கடவுளின் கையில் இருக்கும் கருவியாக மாறி விடுங்கள். அப்போது நீங்கள் செய்யும் செயல் அனைத்தும் கடவுளின் செயலாகவே ஆகி விடும்.
- ராமகிருஷ்ணர்